•5:47:00 PM
மாதம் ஒருமுறை நிச்சயம் கூட்டாஞ்சோறு ஆக்கித் திண்போம். அப்போது தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மிக மிகக் குறைவு. இருந்த ஒன்றிரண்டும் வெகு தூரத்தில் இருக்கும். நான் 16 கிமி தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் போய் 6,7ஆம் வகுப்பு படித்தேன். அப்போது டவுன் பஸ்ஸில் 60 பைசா தனியார் பஸ்ஸில் 80 பைசா டிக்கெட்( 1991 & 92). தினமும் சென்றுவருவதால் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் தான். 20 பைசா குறைவு. :). பள்ளிக்கு மாதக் கட்டணம் 6ஆம் வகுப்பில் 60 ரூபாய் 7ஆம் வகுப்புக்கு 70 ரூபாய். :). 11 மற்றும் 12ஆம் வகுப்பும் தனியார் பள்ளியில்தான் படித்தேன். அப்போது காலாண்டுக் கட்டணம் 1250 ரூபாய். தினமும் அந்த பள்ளிக்கு சென்றுவர 80கிமீ பயணம் :(. காலை 5.45க்கு பஸ் ஏறணும். இப்போ அலாரம் வச்சாலும் அதை ஆஃப் பண்ணிட்டு 8 மணிக்கு தான் எழ முடியுது.. :)
சரி மேட்டர் அதில்லை. இவ்வளவு குறைவான கட்டணமாக தெரிந்தாலும் கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு போய் படிப்பவர்கள் 10 பேர் கூட இல்லை. எல்லாரும் எங்கள் ஊரிலும் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளிலும் தான் படிப்போம். நான் 1 முதல் 5 வரை எங்க ஊரில், 8,9 மற்றும் 10ஆம் வகுப்புகள் 2.5கிமீ தொலைவில் இருந்த அரசு பள்ளிகளில் படித்தேன். சைக்கிள் அல்லது நடந்து போவோம்.
அரசு பள்ளிகளில் படித்ததால் வீட்டுப் பாடம் என்ற கொடுமை எல்லாம் சுத்தமா இல்லை. எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒண்ணும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம். சில சமயங்களில் மைதானத்தில் கல்லும் மண்ணும் கலந்த கலவையில் முட்டி போடணும். மணிக் கணக்கில். கொஞ்ச நாளிலேயே பழகிப்போய்டும். அப்புறம் ஒண்ணும் உறைக்காது. :)
ஆகவே பள்ளி விட்டு வந்தால் எப்போதும் விளையாட்டு தான். எதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டாஞ்சோறுக்கு முடிவு செய்துக் கொள்வோம். தினமும் எல்லோருமே பார்த்துக் கொள்வோமே. ஆகவே செயற்குழு முடிவு உடனடியாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதற்காக தயாராகிவிடுவோம்.
காலை 11 மணிபோல் கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் ஊர் ஏரியில் தான் கூடுவோம். குறைந்தது 30 பேராவது இருப்போம். எல்லாருமே தேவையான பொருள் எதாவது எடுத்து வரவேண்டும் . வெறும் கை வீசி வருபவருக்கு இடமில்லை. யார் என்ன எடுத்து வரவேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்துக் கொள்வோம். கூட்டாஞ்சோறு என்பது தக்காளி சாதம் தான். பலரும் கூட்டாக சமைத்து உண்பதால் கூட்டாஞ்சோறு. வேறு எதும் இல்லை. மற்ற ஊர்களில் எப்படின்னு தெரியலை.
சிலர் அரிசி, சிலர் தக்காளி, சிலர் மிளகாய், ஒருவர் உப்பு, சிலர் பாத்திரங்கள், பாத்திரம் மூடி வைக்க தட்டு இன்னும் அதற்கு தேவையானவை எதுவோ அதெல்லாம் கொண்டு வருவார்கள். ஒவ்வொருவராக இடத்துக்கு வந்து சேர்வார்கள். எல்லாரும் வரும் வரை கதை அடிப்போம். பெரியவங்க ஒரு இடத்துல சேர்ந்தாக் கூட அவங்களுக்கு பேச மேட்டர் கிடைக்குமோ இல்லையோ, எங்களுக்கு பேச அவ்ளோ விஷயங்கள் இருக்கும். எல்லாரும் வந்ததும் ஆளாளுக்கு ஒரு வேலை ஆரம்பிப்போம்.
சிலர் அருகில் இருக்கும் கிணத்து மேடு அல்லது வயல்களின் எல்லைகளுக்காக போடப் பட்டிருக்கும் கல்கட்டுகளில் இருந்து கற்களைக் கொண்டுவருவோம். சிலர் அருகில் இருக்கும் மரங்கள் அல்லது வயல்களில் இருக்கு துவரம் மரங்களின் காய்ந்த கிளைகள் போன்றவற்றை உடைத்து
கொண்டு வரணும். அப்போதும் சமையல் பெண்கள் துறை தான். நாங்கள் எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்ததும் அவர்கள் சமையல் ஆரம்பிப்பார்கள். 30 பேருக்கு மேல் இருந்தாலும் 2 பாத்திரங்களில் சமைத்தால் போதும். பசியாறும் அளவுக்கெல்லாம் யாரும் சாப்பிட மாட்டோம். எல்லோருக்கும் சிறு சிறு கவளங்கள் தான்.
இரண்டு அல்லது மூன்று கற்களை வைத்து அதன் மீது பாத்திரத்தை வைத்து கற்களின் இடையில், கொண்டுவந்த காய்ந்த விறகுகள் அல்லது சிறு சிறு சுள்ளிகளை வைத்து தீ மூட்டுவோம். சில சமயங்களில் காய்ந்த விறகுகள் கிடைக்காது. ஓரளவு பச்சையாக இருக்கும் விறகுகள் தான் கிடைக்கும். அதை தீமூட்டுவது மிக சிரமம். ஆகவே அது அணையும் போதெல்லாம் ஊற்றி எரிய வைக்க மண்ணெண்ணயும் வைத்திருப்போம். காயாத விறகுகளை எரிக்கும் போது ஏராளமாக புகை வரும் . பக்கத்துல ஒரு பய நிக்க முடியாது.
முன்பே பாத்திரங்களில் அரிசி ,தக்காளி ,உப்பு, மிளகாய் என தேவையான அனைத்தும் கலந்து வைத்திருப்போம். அந்த பாத்திரத்தை கற்களின் மீது வைத்து சமையல் ஆரம்பமாகும். அருகில் பெண்கள் அமர்ந்து கரண்டிகளை வைத்துக் பாத்திரத்தில் கிண்டிக் கொண்டே இருப்பார்கள்.சோறு தயாராகும் வரை அருகில் இருக்கும் மரம் அல்லது புதர்களின் அடியில் அமர்ந்து கதை வளர்ப்போம். அங்கு போன சிறிது நேரத்திலேயே அந்த இடங்களில் இருக்கும் புதர்களில் அடியில் அமரும் அளவு இடம் தயார் பண்ணிடுவோம். சிலர் துண்டு விரித்து குட்டித் தூக்கமும் போட்டுவிடுவார்கள்.சிறிது நேரத்தில் கூட்டாஞ்சோறு தயார்.
இது வரை கூட்டாஞ்சோறின் ருசியில் வீட்டில் சாப்பிட்டதில்லை. தக்காளி சாதம் என்றால் நாம் வீட்டில் அல்லது உணவகத்தில் சாப்பிடுவது போல் இருக்காது. பொங்கல் போல் இருக்கும். ஆனால் சுவை மட்டும் மிக அதிகமாக இருக்கும். அந்த வழியே செல்லும் பெரியவர்கள் எல்லாம் கெஞ்சுவார்கள். அவர்களும் சிறு வயதில் இதன் ருசி அனுபவித்தவர்கள் தானே. பெரும்பாலும் கொடுக்க மாட்டோம். அங்கே இருப்பவர்களின் வீட்டச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொடுக்க மாட்டோம். :)
கருவேல மரங்கள் போன்றவற்றின் முட்கள் பரவலாக கீழே இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் செருப்பு போட்டிருக்க மாட்டார்கள். எல்லாருமே வாங்கிக் குடுத்த சில நாட்களிலேயே தொலைத்து விடுவோம். தொலைத்து விட்டு மீண்டும் கேட்டால் வீட்டில் எங்களைத் தொலைத்து விடுவார்கள். ஆகவே வெறுங்காலுடன் தான் முட்களிலும் வெயிலிலும் நடந்தாக வேண்டும். பெரும்பாலும் செருப்பு தொலையும் இடங்கள் கல்யாண வீடுகள் தான். கிராமத்து கல்யாணத்தை பற்றி பெரிய தொடரே எழுதலாம். :).. ஏழை வீடோ பணக்காரர் வீடோ , அது குறைந்த பட்சம் 3 நாள் திருவிழா. விரைவில் எழுதிடுவோம்.
சமையல் நடந்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் போய் அருகில் இருக்கும் வாழை மரங்களில் அல்லது ஆமணக்கு மரங்களில் இலைகளை பறித்து வருவோம். பெரும்பாலும் ஆமணக்கு இலை தான். வாழை இலை கிடைப்பது கொஞ்சம் அரிது. சமையல் முடிந்ததும் இலையை கையில் ஏந்தி வட்டமாக அமர்ந்துவிடுவோம். எல்லாருக்கும் சரியான அளவில் சிலர் பரிமாறுவார்கள். நான்கு ஐந்து மணி நேரங்களுக்கு அங்கு பொழுதைக் கழிப்போம். அங்கேயே அஞ்சாங்கல், கோட்டிப் புல், கபடி என எதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.பிறகு 3 அல்லது 4 மணிக்கு மேல மாடு , எருமை மேய்க்கும் கடமை இருக்கும் என்பதால் அத்துடன் சபை கலைந்துவிடும்.
எல்லார் வீட்டிலும் எருமைகள், மாடுகள் இருக்கும் என்பதால் விடுமுறை நாட்களில் நாங்கள் தான் அதை மேய்க்க வேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் சாணி அள்ளி அருகில் சாணம் கொட்டி
வைத்திருக்கும் இருக்கும் இடத்தில் கொட்ட வேண்டும். மிகப் பெரும் இயற்கை உரம். நிலமில்லாதவர்கள் அல்லது குறைவான நிலம் வைத்திருபப்வர்கள் அதிக விலைக்கு இந்த “எரு”வை விற்பார்கள். இரண்டு வேளை அவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கலந்த தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுக்கு தான் ’தண்ணிக் காட்றது’ அப்டின்னு பேர். இவைகளை பராமரிப்பதையே தனிப் பதிவாக போடலாம். அம்புட்டு மேட்டர் இருக்கு. :)
(..இதுல தான் தண்ணி காட்டணும்.. தீனி அல்லது குளுத்தி என்று பெயர்..)
கூட்டாஞ்சோறு லொக்கேஷன்ஸ் :-)

..தலைகீழ இல்ல... தண்ணீரில் எதிரொளிக்கிறது..


இது போன்ற புதர்கள் அல்லது கருவேல மரத்தடிகளைத்தான் உட்காரும் அளவு மாற்றிவிடுவோம். மூன்றுமே அதே ஏரியில் எடுத்த படங்கள் தான். போட்டோஷாப் ஜிகினா வேலைக்கு ஏற்ற மாதிரி அழகாவும் அசிங்கமாவும் தெரியலாம்..
சரி மேட்டர் அதில்லை. இவ்வளவு குறைவான கட்டணமாக தெரிந்தாலும் கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு போய் படிப்பவர்கள் 10 பேர் கூட இல்லை. எல்லாரும் எங்கள் ஊரிலும் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளிலும் தான் படிப்போம். நான் 1 முதல் 5 வரை எங்க ஊரில், 8,9 மற்றும் 10ஆம் வகுப்புகள் 2.5கிமீ தொலைவில் இருந்த அரசு பள்ளிகளில் படித்தேன். சைக்கிள் அல்லது நடந்து போவோம்.
அரசு பள்ளிகளில் படித்ததால் வீட்டுப் பாடம் என்ற கொடுமை எல்லாம் சுத்தமா இல்லை. எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒண்ணும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம். சில சமயங்களில் மைதானத்தில் கல்லும் மண்ணும் கலந்த கலவையில் முட்டி போடணும். மணிக் கணக்கில். கொஞ்ச நாளிலேயே பழகிப்போய்டும். அப்புறம் ஒண்ணும் உறைக்காது. :)
ஆகவே பள்ளி விட்டு வந்தால் எப்போதும் விளையாட்டு தான். எதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டாஞ்சோறுக்கு முடிவு செய்துக் கொள்வோம். தினமும் எல்லோருமே பார்த்துக் கொள்வோமே. ஆகவே செயற்குழு முடிவு உடனடியாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதற்காக தயாராகிவிடுவோம்.
காலை 11 மணிபோல் கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் ஊர் ஏரியில் தான் கூடுவோம். குறைந்தது 30 பேராவது இருப்போம். எல்லாருமே தேவையான பொருள் எதாவது எடுத்து வரவேண்டும் . வெறும் கை வீசி வருபவருக்கு இடமில்லை. யார் என்ன எடுத்து வரவேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்துக் கொள்வோம். கூட்டாஞ்சோறு என்பது தக்காளி சாதம் தான். பலரும் கூட்டாக சமைத்து உண்பதால் கூட்டாஞ்சோறு. வேறு எதும் இல்லை. மற்ற ஊர்களில் எப்படின்னு தெரியலை.
சிலர் அரிசி, சிலர் தக்காளி, சிலர் மிளகாய், ஒருவர் உப்பு, சிலர் பாத்திரங்கள், பாத்திரம் மூடி வைக்க தட்டு இன்னும் அதற்கு தேவையானவை எதுவோ அதெல்லாம் கொண்டு வருவார்கள். ஒவ்வொருவராக இடத்துக்கு வந்து சேர்வார்கள். எல்லாரும் வரும் வரை கதை அடிப்போம். பெரியவங்க ஒரு இடத்துல சேர்ந்தாக் கூட அவங்களுக்கு பேச மேட்டர் கிடைக்குமோ இல்லையோ, எங்களுக்கு பேச அவ்ளோ விஷயங்கள் இருக்கும். எல்லாரும் வந்ததும் ஆளாளுக்கு ஒரு வேலை ஆரம்பிப்போம்.
சிலர் அருகில் இருக்கும் கிணத்து மேடு அல்லது வயல்களின் எல்லைகளுக்காக போடப் பட்டிருக்கும் கல்கட்டுகளில் இருந்து கற்களைக் கொண்டுவருவோம். சிலர் அருகில் இருக்கும் மரங்கள் அல்லது வயல்களில் இருக்கு துவரம் மரங்களின் காய்ந்த கிளைகள் போன்றவற்றை உடைத்து
கொண்டு வரணும். அப்போதும் சமையல் பெண்கள் துறை தான். நாங்கள் எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்ததும் அவர்கள் சமையல் ஆரம்பிப்பார்கள். 30 பேருக்கு மேல் இருந்தாலும் 2 பாத்திரங்களில் சமைத்தால் போதும். பசியாறும் அளவுக்கெல்லாம் யாரும் சாப்பிட மாட்டோம். எல்லோருக்கும் சிறு சிறு கவளங்கள் தான்.
இரண்டு அல்லது மூன்று கற்களை வைத்து அதன் மீது பாத்திரத்தை வைத்து கற்களின் இடையில், கொண்டுவந்த காய்ந்த விறகுகள் அல்லது சிறு சிறு சுள்ளிகளை வைத்து தீ மூட்டுவோம். சில சமயங்களில் காய்ந்த விறகுகள் கிடைக்காது. ஓரளவு பச்சையாக இருக்கும் விறகுகள் தான் கிடைக்கும். அதை தீமூட்டுவது மிக சிரமம். ஆகவே அது அணையும் போதெல்லாம் ஊற்றி எரிய வைக்க மண்ணெண்ணயும் வைத்திருப்போம். காயாத விறகுகளை எரிக்கும் போது ஏராளமாக புகை வரும் . பக்கத்துல ஒரு பய நிக்க முடியாது.
முன்பே பாத்திரங்களில் அரிசி ,தக்காளி ,உப்பு, மிளகாய் என தேவையான அனைத்தும் கலந்து வைத்திருப்போம். அந்த பாத்திரத்தை கற்களின் மீது வைத்து சமையல் ஆரம்பமாகும். அருகில் பெண்கள் அமர்ந்து கரண்டிகளை வைத்துக் பாத்திரத்தில் கிண்டிக் கொண்டே இருப்பார்கள்.சோறு தயாராகும் வரை அருகில் இருக்கும் மரம் அல்லது புதர்களின் அடியில் அமர்ந்து கதை வளர்ப்போம். அங்கு போன சிறிது நேரத்திலேயே அந்த இடங்களில் இருக்கும் புதர்களில் அடியில் அமரும் அளவு இடம் தயார் பண்ணிடுவோம். சிலர் துண்டு விரித்து குட்டித் தூக்கமும் போட்டுவிடுவார்கள்.சிறிது நேரத்தில் கூட்டாஞ்சோறு தயார்.
இது வரை கூட்டாஞ்சோறின் ருசியில் வீட்டில் சாப்பிட்டதில்லை. தக்காளி சாதம் என்றால் நாம் வீட்டில் அல்லது உணவகத்தில் சாப்பிடுவது போல் இருக்காது. பொங்கல் போல் இருக்கும். ஆனால் சுவை மட்டும் மிக அதிகமாக இருக்கும். அந்த வழியே செல்லும் பெரியவர்கள் எல்லாம் கெஞ்சுவார்கள். அவர்களும் சிறு வயதில் இதன் ருசி அனுபவித்தவர்கள் தானே. பெரும்பாலும் கொடுக்க மாட்டோம். அங்கே இருப்பவர்களின் வீட்டச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொடுக்க மாட்டோம். :)
கருவேல மரங்கள் போன்றவற்றின் முட்கள் பரவலாக கீழே இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் செருப்பு போட்டிருக்க மாட்டார்கள். எல்லாருமே வாங்கிக் குடுத்த சில நாட்களிலேயே தொலைத்து விடுவோம். தொலைத்து விட்டு மீண்டும் கேட்டால் வீட்டில் எங்களைத் தொலைத்து விடுவார்கள். ஆகவே வெறுங்காலுடன் தான் முட்களிலும் வெயிலிலும் நடந்தாக வேண்டும். பெரும்பாலும் செருப்பு தொலையும் இடங்கள் கல்யாண வீடுகள் தான். கிராமத்து கல்யாணத்தை பற்றி பெரிய தொடரே எழுதலாம். :).. ஏழை வீடோ பணக்காரர் வீடோ , அது குறைந்த பட்சம் 3 நாள் திருவிழா. விரைவில் எழுதிடுவோம்.
சமையல் நடந்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் போய் அருகில் இருக்கும் வாழை மரங்களில் அல்லது ஆமணக்கு மரங்களில் இலைகளை பறித்து வருவோம். பெரும்பாலும் ஆமணக்கு இலை தான். வாழை இலை கிடைப்பது கொஞ்சம் அரிது. சமையல் முடிந்ததும் இலையை கையில் ஏந்தி வட்டமாக அமர்ந்துவிடுவோம். எல்லாருக்கும் சரியான அளவில் சிலர் பரிமாறுவார்கள். நான்கு ஐந்து மணி நேரங்களுக்கு அங்கு பொழுதைக் கழிப்போம். அங்கேயே அஞ்சாங்கல், கோட்டிப் புல், கபடி என எதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.பிறகு 3 அல்லது 4 மணிக்கு மேல மாடு , எருமை மேய்க்கும் கடமை இருக்கும் என்பதால் அத்துடன் சபை கலைந்துவிடும்.
எல்லார் வீட்டிலும் எருமைகள், மாடுகள் இருக்கும் என்பதால் விடுமுறை நாட்களில் நாங்கள் தான் அதை மேய்க்க வேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் சாணி அள்ளி அருகில் சாணம் கொட்டி

(..இதுல தான் தண்ணி காட்டணும்.. தீனி அல்லது குளுத்தி என்று பெயர்..)
கூட்டாஞ்சோறு லொக்கேஷன்ஸ் :-)

..தலைகீழ இல்ல... தண்ணீரில் எதிரொளிக்கிறது..


இது போன்ற புதர்கள் அல்லது கருவேல மரத்தடிகளைத்தான் உட்காரும் அளவு மாற்றிவிடுவோம். மூன்றுமே அதே ஏரியில் எடுத்த படங்கள் தான். போட்டோஷாப் ஜிகினா வேலைக்கு ஏற்ற மாதிரி அழகாவும் அசிங்கமாவும் தெரியலாம்..
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..